Ostan Stars
Neer sonnal
நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
உம் கண்கள் என்னை தேடும்
நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்
உம் கிருபையும் உம் வார்த்தையும்
எந்தன் வாழ்வை தாங்கும்

பெலவீனன் என்று சொல்லாமல்
பெலவான் என்பேன் நான்
சுகவீனன் என்று சொல்லாமல்
சுகவான் என்பேன் நான்

பாவி என்றென்னை தள்ளாமல்
பாசத்தால் என்னை அணைத்தவரே
பரியாசமும் பசி தாகமும்
உம்மை விட்டு என்னை பிரிக்காதே

மெய் தேவா உம் அன்பை காட்டவே
சொந்த ஜீவனை தந்தீரய்யா
உம் மார்பிலே தினம் சாய்ந்து நான்
முத்தமிட்டு இளைப்பாறுவேன்

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன் (4)