Unga prasanthail siraguillamal

உங்க பிரசன்னத்தில்
சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில்
குறைவில்லாமல் வாழ்கிறேன்

என் தஞ்சமானீரே
என் கோட்டையானீரே
என் துருகமானீரே
என் நண்பனானீரே

உதவாத என்னையே
உருவாக்கும் உறவே
குறைவான என்னையே
நிறைவாக்கும் நிறைவே

பொய்யான வாழ்வையே
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே