Ilaiyaraaja
சுந்தரி கண்ணால் (Sundari Kannaal)
[Chorus: S.P Balasubrahmanyam & S. Janaki]
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

[Pre-Chorus: S.P Balasubrahmanyam]
நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

[Chorus: S.P Balasubrahmanyam & S. Janaki]
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

[Break]

[Verse 1: S. Janaki]
வாய்மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய்விரித்துப் பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா?

[Verse 2: S.P Balasubrahmanyam
Ahhh~ வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
[Verse 3: S. Janaki & S.P Balasubrahmanyam]
தேனிலவுதான் வாட ஏனிந்த சோதனை
வானிலவை நீ கேளு கூறுமென் வேதனை
எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

[Verse 4: S. Janaki & S.P Balasubrahmanyam]
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி

[Pre-Chorus: S. Janaki]
நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

[Chorus: S.P Balasubrahmanyam & S. Janaki]
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

[Break]

[Verse 5: S. Janaki]
சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நானுன் மார்பில் தூங்கினால்
[Verse 6: S.P Balasubrahmanyam]
Ahhh~ மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்

[Verse 7: S. Janaki & S.P Balasubrahmanyam]
கோடி சுகம் வாராதோ
நீயெனைத் தேடினால்
காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்

[Verse 8: S. Janaki & S.P Balasubrahmanyam]
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக் கூடும்

[Chorus: S.P Balasubrahmanyam & S. Janaki]
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

[Pre-Chorus: S.P Balasubrahmanyam]
நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
[Chorus: S.P Balasubrahmanyam & S. Janaki]
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக